ஜெனீவா

கொரோனாவோடு குரங்கம்மையை ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

குரங்கம்மை என்னும் ஒரு அரிய வகை தொற்று நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது.  ஆனால் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. தற்போது உலகம் முழுவதும் குரங்கம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்த நோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் செய்தியாளர்களிடம்,

“நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் சமாளிக்க வேண்டும். நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது இதனைப் புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா?

நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இதிலிருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது. குரங்கம்மை நோயை கொரோனாவோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இதனை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்’

எனத் தெரிவித்துள்ளார்.