டாக்கா
போராட்டத்தால் மூடப்பட்டிருந்த வங்கதேச கல்வி நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

வங்கதேசத்தில் 30 சதவிகித இட ஒதுக்கீடுக்கு எதிராக போராட்டம் வெடித்தது. கடந்த ஜூன் மாதம் வெடித்த இந்த போராட்டத்தி வன்முறை ஏற்பட்டு நாடு முழுவதும் பதற்றம் அதிகரித்ததால் கடந்த மாதம் 17 ஆம் தேதி அங்குள்ள கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன.
போராட்டக்காரர்கள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகும் வரை போராட்டம் நடைபெறும் என அறிவித்து போராட்டத்தை தீவிரப்படுத்தினர். மாணவர் போராட்டம் தீவிரமடைந்ததால் கடந்த 5-ந்தேதி ஷேக் ஹசீனா பதவி விலகி நாட்டை விட்டு வெளியேறினார்.
வங்கதேச ஆட்சியை ராணுவக் கைப்பற்றி பொருளாதார நிபுணர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசும் அமைக்கப்பட்டது. மெல்ல மெல்ல நாட்டில் இயல்பு நிலை திரும்பியதால் கல்வி நிறுவனங்களை மீண்டும் திறக்க இடைக்கால அரசு முடிவு செய்தது.
இந்த மாதம் 18-ந்தேதி முதல் கல்வி நிறுவனங்களை திறக்குமாறு கடந்த 15-ந்தேதி கல்வி அமைச்சகம் உத்தரவிட்டது. அமைச்சகத்தின் இந்த உத்தரவின் படி சுமார் ஒரு மாதத்துக்குப்பிறகு நாடு முழுவதும் நேற்று பள்ளிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டுள்ளன.
[youtube-feed feed=1]