டெல்லி:  இந்தியாவின் 78-வது சுதந்திரதின விழா நாடு முழுவதும் நாளை (வியாழக்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி டெல்லி பிரதமர் மோடி 11வது முறையகா தேசிய கொடி ஏற்றகிறார்.  இது இந்திய அரசு சார்பில் டெல்லி செங்கோட்டையில் நடைபெறும் விழா பிரதான விழா ஆகும். இந்த விழாவில் கலந்துகொள்ள விவசாயிகள் உள்பட 4000 பேருக்கு சிறப்பு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

2024ஆம் ஆண்டில், இந்தியாவின் சுதந்திர தினம் “விக்சித் பாரத்” மீது கவனம் செலுத்தும், இது “வளர்ந்த இந்தியா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது, இது 2047 ஆம் ஆண்டுக்குள் தேசத்தை ஒரு வளர்ந்த நாடாக மாற்றும் நடவடிக்கையுடன் முன்னேறி செல்கிறது.  ‘விக்சித் பாரத்’ என்ற சிந்தனையோடு இ்நத ஆண்டு சுதந்திர தின விழா கொண்டாடப்படு கிறது.

சுதந்திர தின விழாவையொட்டி பிரதமர் மோடி நாளை டெல்லி செங்கோட்டையில்,  காலை 7.30 மணிக்கு தேசியக்கொடி ஏற்றி சுதந்திர தின உரை நிகழ்த்துகிறார். இது அவரது 11-வது சுதந்திர தின உரை என்பது குறிப்பிடத்தக்கது.  இதையொட்டி  டெல்லியில் உச்சக்கட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் ஏழைகள் – பிரதமர் நரேந்திர மோடியால் “வளர்ந்த இந்தியாவின் நான்கு தூண்கள்” என்று வர்ணிக்கப்படுகிறார்கள் – இந்த ஆண்டு 78 வது சுதந்திர தின கொண்டாட்டங்களுக்காக மையம் வரையப்பட்ட 4,000 சிறப்பு விருந்தினர்களின் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. மொத்தம் 18,000 மின் அழைப்பிதழ் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.

செங்கோட்டையில் நடைபெறும் நிகழ்வில் சிறப்பு விருந்தினர்கள் விருந்தளிப்பார்கள், அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு குடும்ப உறுப்பினரால் அழைக்கப்பட்டுள்ளனர். விருந்தினர்கள் பின்வருமாறு வகைப்படுத்தப்பட்டுள்ளனர்:

விவசாயம் மற்றும் விவசாயிகள் நலன் பிரிவில் இருந்து 1,000,
இளைஞர் விவகார பிரிவில் இருந்து 600,
பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு பிரிவில் இருந்து 300,
பஞ்சாயத்து ராஜ் மற்றும் ஊரக வளர்ச்சியில் இருந்து 300,
பழங்குடியினர் விவகாரங்களில் இருந்து 300,
பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவில் இருந்து 200,
200 எல்லை சாலைகள் அமைப்பு/பாதுகாப்பு அமைச்சகம்,
உடல்நலம் மற்றும் குடும்ப நலனில் இருந்து 150,
விளையாட்டிலிருந்து 150,
நிதி ஆயோக் பிரிவில் இருந்து 1,200 என மொத்தம் 4000 பேர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி டெல்லியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. ஏற்கனவே  இந்தியாவுக்கு பயங்கரவாதிகள் தரப்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு இருப்பதால் பாதுகாப்பில் பாதுகாப்பு படையினர் மிகுந்த அக்கறை செலுத்தியுள்ளனர். உளவுப்பிரிவு போலீசாரும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். நாடு முழுவதும் முக்கிய இடங்களில் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

டெல்லியில் மட்டும்  பாதுகாப்பு பணிக்காக 3,500 போக்குவரத்து போலீசார், 10 ஆயிரம் டெல்லி போலீசார் ஆகியோர் செங்கோட்டையின் வெளிப்புறப் பகுதிகளில் நிறுத்தப்படு கிறார்கள். செங்கோட்டையையொட்டி மற்றும் உட்புற பகுதியில் துணை ராணுவப்படையினர் அடுக்கடுக்காக நிறுத்தப்பட உள்ளனர்.

செங்கோட்டையைச் சுற்றியுள்ள சாலைகள் பாதுகாப்பு படையினரின் வசம் கொண்டு வரப்பட்டு உள்ளது. கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்பட்டு உள்ளன. செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் 700 இடங்களில் பொருத்தப்பட்டு உள்ளது.

டெல்லி செங்கோட்டை பகுதி மட்டுமின்றி விமான நிலையம், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள், வணிக வளாகங்கள், சந்தைகள் போன்ற மக்கள் அதிகமாக கூடும் இடங்களிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. சுதந்திர தினவிழாவில் பல்வேறு தரப்பினர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்க அழைக்கப்பட்டு உள்ளனர்.

குறிப்பாக தெரிவு செய்யப்பட்ட ஊராட்சி பிரதிநிதிகள், அங்கன்வாடி ஊழியர்கள், ‘ஒன் ஸ்டாப்’ மைய ஊழியர்கள், குழந்தைகள் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்கிறார்கள்.