சென்னை

சென்னை மாநகராட்சியில் திமுக மற்றும் அதிமுக வை சேர்ந்த சில கவுன்சிலர்கள் ஊழல் புகார் காரணமாக நீக்கம் செய்யப்ப்பட உள்ளதாக தெரியவந்துள்ளது.

சென்னை மாநகராட்சி தற்போது திமுக வசம் இருந்து வருகிறது.  மாநகராட்சியின் மேயராக திமுகவை சேர்ந்த பிரியா பதவி வகித்து வருகிறார்.  கடந்த 2022 ஆம் ஆண்டு நடந்த சென்னை  மாநகராட்சி தேர்தலில் 179 இடங்களில் திமுக மற்றும் 15 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது;

இந்த கவுன்சிலர்களில் ஒரு சிலர் தங்களது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதாக தொடர்ந்து மாநகராட்சிக்கு புகார்கள் வந்தன.  இவர்கள் தங்கள் வார்டுகலில் நடைபெறும் கட்டுமானப் பணிகளை தடுப்பதாகவும், லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பணிகளை தொடர விடுவதாகவும் அங்குள்ள மக்கள் புகார்கள் அளித்துள்ளனர்.

எனவே தமிழக அரசு விரைவில் இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் எனவும் இதனால் திமுக மற்றும் அதிமுகவை சேர்ந்த சில கவுன்சிலர்கள் நீக்கம் செய்யப்ப்படலாம் எனவ்ய்ம் தகவல்கள் தெரிவிக்கின்றன.