வாஷிங்டன்

மெரிக்கா உக்ரைனுக்கு மேலும் ஆயுதம் வழங்கும் என அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் கூறி உள்ளார்.

உக்ரைன் நாடு ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து அச்சுறுத்தலை எதிர்கொண்டு வந்தால், உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பாக கருதப்படும் நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றதால்ல் கோபம் அடைந்த ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது போரை தொடங்கியது.

இந்த்ப் போர் 2 ஆண்டுகளை கடந்தும் முடிவின்றி நீண்டு வருகிறது. போரில் நேட்டோ உறுப்பு நாடுகள் உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவி அளித்து வருவதால் அந்த நாட்டு ராணுவத்தால் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட முடிகிறது.

நேற்று நேட்டோ அமைப்பின் 75-வது ஆண்டு விழாவையொட்டி அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் நேட்டோ உச்சி மாநாடு தொடங்கியது நேட்டோ உறுப்பு நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்ட இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் மாநாட்டில் பங்கேற்றார்

இந்த. மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்,

”வரவிருக்கும் மாதங்களில் அமெரிக்காவும், அதன் நட்பு நாடுகளும் உக்ரைனுக்கு கூடுதல் வான் பாதுகாப்பு அமைப்புகள் உள்பட ஏராளமான ஆயுதங்களை வழங்க முடிவு செய்துள்ளன. நாங்கள் முக்கியமான வான் பாதுகாப்பு இடைமறிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, போரில்உக்ரைன் முன்னோக்கி செல்வது உறுதி செய்யப்படும்.

இந்த போரில் ரஷியா தோல்வி அடைந்து வருகிறது. 2 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் புதினின் விருப்ப போரில், அவரது இழப்புகள் அதிர்ச்சி அளிக்கின்றன. போரில் 3½ லட்சத்துக்கும் மேற்பட்ட ரஷிய துருப்புக்கள் பலியாகினர்.

சுமார் 10 ரஷிய இளைஞர்கள் ரஷியாவை விட்டு வெளியேறி உள்ளனர், அவர்கள் ரஷியாவில் எதிர்காலத்தை காணவில்லை.போர் தொடங்கியபோது 5 நாட்களில் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்று அவர் (புதின்) நினைத்தார். 2½ ஆண்டுகள் கழித்து இன்னும் நிற்கிறது, தொடர்ந்து நிற்கும். இந்த போருக்கு முன், நேட்டோ உடைந்து விடும் என்று புதின் நினைத்தார் என்பது அனைத்து நட்பு நாடுகளுக்கும் தெரியும்.

இன்று, நேட்டோ அதன் வரலாற்றில் இருந்ததை விட பலமாக உள்ளது. இந்த அர்த்தமற்ற போர் தொடங்கிய போது, உக்ரைன் ஒரு சுதந்திர நாடாக இருந்தது. இன்றும் அது சுதந்திர நாடாகவே உள்ளது. இந்த போரில் ரஷியா வெற்றி பெறாது. உக்ரைனே வெற்றி பெறும்.உலக பாதுகாப்பின் அரணாக நேட்டோ உள்ளது என்பதை நினைவில் நாம் கொள்வோம்”

என்று உரையாற்றியுள்ளார்.