சென்னை

மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் நினைவிடத்தில் அவர் மனைவி பிரேமலதா தியானம் செய்து வருகிறார்.

கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகள் கூட்டணியிட்டும், நாம் தமிழர் கட்சி தனித்தும் களம் கண்டது.

தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

விருதுநகர் தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர் 2,31,828 வாக்குகள் பெற்று தற்போது முன்னிலையில் உள்ளார். தே.மு.தி.க. வேட்பாளர் விஜய பிரபாகர் 2,24,189 வாக்குகள் பெற்று பின்னடைவை சந்தித்துள்ளார்

அதாவது விஜய பிரபாகரை விட மாணிக்கம் தாகூர் 7,639 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.  மேலும் பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 97,390 வாக்குகளும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கவுசிக் 45,206 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகர் (தேமுதிக), மாணிக்கம் தாகூர் (காங்) மாறி மாறி முன்னிலை வகித்து வரும் நிலையில், விஜயகாந்த் நினைவிடத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா தியானம் செய்து வருகிறார்.