சென்னை

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவுக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வாழ்த்து தெர்வித்துள்ளார்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. இதில் ஆந்திராவில் உள்ள மொத்த சட்டசபை தொகுதிகளின் எண்ணிக்கை 175 இல் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

ஆந்திராவில் 175 சட்டசபை தொகுதிகளில் 158 இடங்களில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. கூட்டணி இல்லாமலே 131 தொகுதிகளில் தெலுங்குதேசம் கட்சி முன்னிலை வகிக்கிறது. எனவே தேவையான இடங்களுக்கு மேல் தெலுங்குதேசம் முன்னிலையில் இருப்பதால் அக்கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வர் ஆவது உறுதியாகி உள்ளது.

தமிழக முதல்வ்ர்ர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில்,

‘ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) தலைவர் சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு வாழ்த்துகள்.

தங்களது தலைமை ஆந்திரத்துக்கு வளத்தையும் வளர்ச்சியையும் தந்து, அம்மாநில மக்களின் கனவுகளையும் நம்பிக்கையையும் நிறைவேற்றட்டும்’

என்று பதிந்துள்ளார்.