டெல்லி

நாடாளுமன்றத் தேர்தலில் தாம் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களிக்கப் போவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

நேற்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி டெல்லியில் பிரசாரம் மேற்கொண்டபோது

“அரசியலமைப்பை அழிப்பவர்களிடம் இருந்து அதை காப்பாற்றுவதே அனைவரின் முதல் நோக்கமாக இருக்க வேண்டும். இதற்காகவே ஆம் ஆத்மியுடன் கூட்டணி வைத்துள்ளோம். டெல்லியில் 3 தொகுதிகளில் காங்கிரசுக்கும், 4 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் தொண்டர்களை கேட்டுக்கொள்கிறேன். இதைப்போல ஆம் ஆத்மி தொண்டர்களும் 4 தொகுதிகளில் தங்கள் தலைவர்களுக்கும், 3 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கும் வாக்களிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இந்த தேர்தலில் நான் ஆம் ஆத்மிக்கு வாக்களிப்பதும், அரவிந்த் கெஜ்ரிவால் காங்கிரசுக்கு ஓட்டு போடுவதும் சுவாரசியமாக இருக்கும். பிரதமர் மோடி தனக்கு பிடித்தமான சில செய்தியாளர்களுக்கு இடைவிடாமல் பேட்டி கொடுக்கிறார். ஆனால் என்னுடன் விவாதிக்க அவர் வரமாட்டார். ஏனெனில் எனது கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாது என்பது அவருக்கு தெரியும்.பிரதமர் என்னுடன் விவாதிக்க வரமாட்டார்

ஆனால் நான் எழுப்பும் பிரச்சினைகளை பொதுக்கூட்டங்களில் மட்டும் பேசுவார். அதானி-அம்பானி குறித்து ஏன் பேசவில்லை என்று நான் கேட்ட உடனே, அது குறித்து பேசினார். மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் அக்னிவீரர் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீசுவோம். சிறு வணிகர்களுக்கு உதவும் வகையில் ஜி.எஸ்.டி.யை எளிமையாக்குவோம்”

என்று உரையாற்றி உள்ளார்.