சென்னை

மிழுக்கு 22 வருடங்களாக ஞானபீட விருது வழங்கவில்லை என்று கவிஞர் வைரமுத்து  தெரிவித்துள்ளார்.

மலேசியத் தமிழ் இலக்கிய காப்பகமும் தமிழ் பேராயமும் கவிஞர் வைரமுத்துவின் ‘மகா கவிதை’ என்ற நூலுக்கு விருது அறிவித்துள்ளது. சென்னை அடையாற்றில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர். டத்தோ ஸ்ரீ சரவணன் கலந்து கொண்டார்

அப்போது அவர் கோலாலம்பூரில் வரும் 8 ம் தேதி விருது வழங்கும் விழா நடைபெற உள்ளதாக அறிவித்தார்.  இந்நிகழ்வில் கவிஞர் வைரமுத்து கலந்து கொண்டு உரையாற்றினார்

கவிஞர் வைரமுத்து,

“நான் மகா கவிதை நூலுக்காகக் கொடுத்து உழைப்பு, வலி போன்றவை இந்த விருதுக்கு முன்பு துச்சம். கடந்த 22 ஆண்டுகளாக ஞான பீடம் விருது தமிழுக்கு வழங்கப்படவில்லை. வீட்டில் உள்ள குழாயில் அடைப்பு இருந்தால் சில மணி நேரங்களில் சரி செய்கிறோம், ஆனால் 22 ஆண்டுகளாக விருதுக் குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை யார் சரி செய்வது?”

என்று வினா எழுப்பினார்.