சென்னை: கொரோனா பாதிப்பு குறைவதால் சென்னை அரசு மருத்துவமனைகளில் 20% படுக்கைகள் காலியாக உள்ளதாக மருத்துவமனை டீன்கள் தெரிவித்து உள்ளனர்.

கொரோனா 2வதுஅலை தமிழகத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், சென்னை உள்பட பல மாவட்டங்களில் குறையத்தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் இதுவரை 21,23,029 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அதிக பாதிப்பு உள்ள மாவட்டமாக, சென்னையை பின்னுக்குத்தள்ளி கோவை முதலிடத்தில் திகழ்ந்து வருகிறது.
சென்னையில் நேற்று 2,467 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 5,06,937 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 7,145 பேர் மரணம் அடைந்துள்ளனர். 4,67,723 பேர் குணம் அடைந்துள்ளனர். தற்போது சென்னையில் 33,069 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சி எடுத்த அதிரடி நடவடிக்கை காரணமாக, சென்னையில் தொற்று பரவல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு உள்ளது. இதனால், கொரோனா நோயாளிகளுக்காக அரசு மருத்துவமனைகளில் உருவாக்கப்பட்ட படுக்கைகள் தற்போது காலியாகி வருகிறது. இன்றைய சூழலில் 20 சதவிகித படுக்கைகள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (எஸ்.எம்.சி.எச்) போன்ற மருத்துவமனைகளில் 2,000-ஒற்றைப்படை படுக்கைகள் காலியாக உள்ளன, இதில் பாதிக்கும் மேற்பட்டவை ஆக்ஸிஜன் உடன் கூடிய படுக்கைகள்.‘
இதுகுறித்து கூறிய ஸ்டாலின் அரசு மருத்துவமனை டீன் பாலாஜி, நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணமாக, சில வாரங்களுக்கு முன்பு, மருத்துவமனையில் இரந்த 150 படுக்கைகள் நிரம்பின, 120 ஆம்புலன்ஸ்கள் மருத்துவமனைக்கு வெளியே காத்திருக்க வேண்டியிருந்தது. இதை தடுக்கும் வகையில் ஜீரோ டிலே வார்டு உருவாக்கப்பட்டது. தற்போது தொற்று பரவல் குறைந்துள்ளதால், ஜீரோ டிலே வார்டில்12 நோயாளிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரிவித்து உள்ளார்.
அதுபோல, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், இந்த வாரம் உள்நோயாளிகளின் அளவு 25% குறைந்துள்ளது என்று அம்மருத்துவமனையின் டீன் ஜெயந்தி தெரிவித்து உள்ளார். மேலும், நோயாளிகள் அதிகரிப்பு காரணமாக, அவர்களுக்கு தேவையான மருத்துவ வசதி, ஆக்சிஜன் பற்றாக்குறை மற்றும் படுக்கைகள் மீதான அதிகப்படியான மன அழுத்தம் குறைந்துவிட்டது என்று தெரிவித்துள்ளார்.
[youtube-feed feed=1]