டெல்லி: கருத்து சுதந்திரத்தை பாதுகாப்பதே எங்கள் கொள்கை என்று  மத்தியஅரசிடம் மோதலில் ஈடுபட்டுள்ளது டிவிட்டர் நிறுவனம். இது பரபரப்பை ஏற்படுத்தி

வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் நடைபெற்று விவசாயிகளின் போராட்டத்தில், சிலர்  வதந்திகளை பரப்பி வருவதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, ஆய்வு செய்த மத்தியஅரசு,  பாகிஸ்தான் ஆதரவு காலிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 1,178 கணக்குகளை உடனே நீக்க வேண்டும்  என  டிவிட்டர் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

விவசாயிகளின் போராட்டம் குறித்து, சமூக வலைத்தளங்கள் வாயிலாக பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்கள் கருத்துக்களை பதிவு செய்தவண்ணம் உள்ளனர். உலக நாடுகளின் சமூக ஆர்வலர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஜனவரி 26ந்தேதி டிராக்டர் பேணி வன்முறைக்கு பிறகு, விவசாயிகளின் போராட்டம் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. போராடும் விவசாயிகள் கூட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்களும் ஊடுருவி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மூலம்,  விவசாய சட்டம் மற்றும், விவசாயிகளின்  போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்புவதுடன், ஆத்திரமூட்டும் வாசகங்களை பதிவு செய்து குழப்பத்தை ஏற்படுத்தி வருவதாக, 1178 பாகிஸ்தான் மற்றும் காலிஸ்தான் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகளை நீக்கும்படி மத்திய அரசு  டிவிட்டர் நிர்வாகத்துக்கு  அறிவுறுத்தியது.

ஆனால், டிவிட்டர் நிறுவனம், மத்தியஅரசின் உத்தரவை மதிக்காமல் இருந்து வந்தது. இதையடுத்து, மத்தியஅரசு தரப்பில் டிவிட்டர் நிறுவனத்துக்கு மீண்டும்  1,178 காலிஸ்தான் ஆதரவாளர்களின் டிவிட்டர் கணக்குகளை முடக்குமாறு அறிவுறுத்தியது.

இந்த நிலையில், மத்தியஅரசுக்கு டிவிட்டர் நிர்வாகம் பதில் அளித்துள்ளது. அதில்,  இந்திய சட்டத்திற்கு எதிரான கணக்குகளைத் தடுக்க வேண்டும் என்பது,  கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு எதிரானது என்று தெரிவித்துள்ளது.

மேலும், 500 க்கும் மேற்பட்ட கணக்குகளை கையாளுதலில் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன்,  நாங்கள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் இந்திய சட்டத்துடன் ஒத்துப்போகும் என்று நாங்கள் நம்பவில்லை, மேலும், பாதுகாக்கப்பட்ட பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தை பாதுகாக்கும் எங்கள் கொள்கைகளுக்கு இணங்க, செய்தி ஊடகங்களைக் கொண்ட கணக்குகளில் நாங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

சட்டவிரோதமாக கருத்துகள் பதிவிடப்படுவதாக சட்டப்படியான புகார் வந்தால் நாங்கள், அந்த டிவீட் குறித்து டிவிட்டர் விதிமுறைகளுக்கும், அந்த நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கும் கீழ் உள்ளதாக என்று ஆராய்வோம்.

ஒருவேளை அந்த டிவீட், டிவிட்டர் நிறுவனத்தின் விதிமுறைகளை மீறியிருந்தால் அந்த டிவீட் உடனடியாக நீக்கப்படும். ஒருவேளை, டிவிட்டர் நிர்வாகத்துக்கு உட்பட்டு டிவீட் இருந்து, நாட்டின் சட்டத்தை மீறியிருந்தால், அந்த நாட்டின் எல்லைக்குள் மட்டுமே நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

மத்தியஅரசுடன் மோதல் போக்கை டிவிட்டர் நிர்வாகம் கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

முன்னதாக  பிப்ரவரி 8 ம் தேதி, மத்தியஅரசுக்கு பதில் அளித்த டிவிட்டர், மத்தியஅரசின் நடவடிக்கைக்கு  ஒத்துழைப்பதாகக் கூறியதுடன்,  இது நாட்டில் சட்டம் ஒழுங்குக்கு அச்சுறுத்தலாக இருக்கும் கணக்குகள் மற்றும்  டிவீட்களை எடுத்துக்கொள்ளாததற்காக மைக்ரோ பிளாக்கிங் தளத்தை தண்டிக்கும் நடவடிக்கை என்று முன்னர் எச்சரித்தது.

மேலும், டிவிட்டர் நிறுவனம்,  தனது ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து அக்கறை கொண்டுள்ளதாகவும், முறையான உரையாடலுக்காக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்தை அணுகியதாகவும், ஆனால், டிவிட்டர் நிறுவனத்தின் கோரிக்கையை  நிராகரிக்கப்பட்டதாகவும்,  அதற்கு பதிலாக, அரசாங்க தளத்திலிருந்து சமூக ஊடக நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைக்கு அமைச்சகத்தின் செயலாளர் தலைமை தாங்குவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும, “தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 69-ஏ பிரிவின் கீழ் பிறப்பிக்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றாததற்காக” அபராதம் விதிக்கப்படும் என்றும் மத்தியஅரசு, டிவிட்டர்  சமூக ஊடக தளத்தை எச்சரித்துள்ளது.

ஐ.டி சட்டத்தின் பிரிவு 69 ஏ (3) கூறுகிறது, “துணைப்பிரிவு (1) இன் கீழ் வழங்கப்பட்ட வழிகாட்டுதலுக்கு இணங்கத் தவறும் பட்சத்தில் சமூக ஊடக தளம் தலைவருக்கு  ஏழு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.