டெல்லி: ஜனவரி 29ம் தேதி முதல் நாடாளூமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா கூறி இருப்பதாவது:-மக்களவை மாலை 4 மணி முதல் இரவு 9 மணிவரையும், மாநிலங்களவை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரையும் நடைபெறும்.
நேரமில்லா நேரம், கேள்வி நேரம் நடைபெறும். நாடாளுமன்ற கூட்டத் தொடருக்கு முன்பு அனைத்து உறுப்பினர்களுக்கும் கொரோனா பரிசோதனை கட்டாயம் செய்யப்படும்.
கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே கூட்டத்தொடரில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர் என்று கூறினார்.
Patrikai.com official YouTube Channel