Skip to content
  • Wed. Sep 9th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை…

Dec 31, 2020

புதுச்சேரி: கவர்னர் மாளிகை பெண் ஊழியருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், கவர்னர் கிரண்பேடிக்கும் கொரோனா சோதனை நடத்தப்பட்டு உள்ளது. மேலும் கவர்னர் மாளிகையில் பணியாற்றும்  25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை கொரோனா பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை38,096 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 37,100 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 633 பேர் பலியாகி உள்ளனர்.

இந்த நிலையில்,  கவர்னர் மாளிகையில் பணியாற்றி வரும்  கோவையை சேர்ந்த ஈஷா என்ற இளம்பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் கிரண்பேடியின் நேரடி கண்காணிப்பில்,  கவர்னரின் செயல்பாடுகளை சமூக வலைதளங்களில் பதிவிடும் பணிகளை கவனித்து வந்ததாக கூறப்படுகிறது.

இவர் சமீபத்தில் சொந்த ஊரான கோவைக்கு சென்று திரும்பிய நிலையில்,  அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏற்பட்டதை தொடர்ந்து சோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், அவரை  ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதையடுத்து, கவர்னர் கிரண்பெடி மற்றும் கவர்னர் மாளிகையில் பணிபுரியும் 25 ஊழியர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இந்த பரிசோதனை முடிவுகள் இன்று மாலை வெளியாகும் என தெகிறது.

ஏற்கனவே ஒருமறை கவர்னர் கிரண்பேடிக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Post navigation

உருமாறிய கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது! எய்ம்ஸ் இயக்குனர் தகவல்
சபரிமலை ஐயப்பன் கோவிலில் 37 ஊழியர்களுக்கு கொரோனா உறுதி

Related Post

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

News தமிழ் நாடு

2030ம் ஆண்டில் தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார மாநிலமாக உயரும் ! தமிழ்நாடு அரசு

உலகம்

இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar
உலகம்

ஹாரி–மேகன் அமெரிக்காவை விட்டு பிரிட்டனுக்குத் திரும்பியதில் மகிழ்ச்சி: டிரம்ப் கருத்து

September 3, 2026 Sundar
இந்தியா உலகம் தமிழ் நாடு

எல் நினோ வலுப்பெறும்: உலகம் முழுவதும் கடும் வெயில், மழை, வெள்ளம் ஏற்படும் அபாயம் – ஐ.நா. எச்சரிக்கை

September 3, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer