Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
சினி பிட்ஸ் தமிழ் நாடு

அரசியலா.. ஆன்மிகமா.. முழுக்கா? இன்று மாவட்ட செயலாளர்களுடன் ரஜினி மீண்டும் ஆலோசனை…

Nov 30, 2020

சென்னை: ஆன்மிக அரசியலுக்கு வருவதாகவும், கட்சித் தொடங்கப்போவதாகவும் அறிவித்து விட்டு, அவ்வப்போது படவெளியீட்டின்போது, தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை அழைத்து பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டு, மீண்டும் ஒதுங்கிக்கொள்ளும் நடிகர் ரஜினிகாந்த் தற்போது மீண்டும் தனது மக்கள் இயக்கத்தின் மாவட்டச் செயலாளர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.

ரஜினியின் அண்ணாத்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுவதால் ரஜினி தனது மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்போகிறாரா அல்லது, தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் வர உள்ள நிலையில், தனது ஆன்மிக அரசியல் கட்சி குறித்து ஆலோசனை நடத்தப்போகிறாரா என்பது  விரைவில் தெரியவரும்.

நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடப்போவதாக கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் 31ந்தேதி அறிவித்தார்.  அப்போது, தனது ரசிகர்கள் மன்றத்தினரை  சந்திப்பை நடத்திய ரஜினிகாந்த், ‘தான் அரசியலுக்கு வருவது உறுதி’ என்று அறிவித்தார். ஆனால், ஆண்டுகள் 3 கடந்தோடிய நிலையில்,  அவ்வப்போது ரசிகர் மன்றத்தினரை கூட்டி, தான் நடித்து வரும் படங்களை வெற்றிப்படங்களாக மாற்றி வருகிறார்.

இந்த நிலையில், இன்னும் 6 மாதத்தில் தமிழக சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. ஆனால், ரஜினி இன்னும் கட்சி குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாத நிலையில்,  கடந்த அக்டோபர் 29-ந் தேதி அவரது பெயரில் பரபரப்பு அறிவிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது.  அதில், ‘தமிழகத்தில் ஆட்சி மாற்றம், அரசியல் மாற்றத்திற்காக மக்களிடையே எழுச்சியை உண்டாக்க இந்த ஆண்டு மார்ச் மாத இறுதியில் மற்றும் மே, ஜூன், ஜூலை மாதங்களில் தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து, அக்டோபர் 2-ந் தேதி மதுரையில் மாநாடு கூட்டி கட்சியின் பெயரையும், கொடியையும் அறிவிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், கொரோனா பிரச்சினையினால் கடந்த பல மாதங்களாகவே யாரையும் சந்திக்க முடியவில்லை. அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தவும் இயலவில்லை. 2011-ம் ஆண்டு எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வந்தேன். அமெரிக்காவில் ராசெஸ்டர் நகரில் உள்ள மயோ கிளீனிக்கில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை அளிக்கப்பட்டது. அரசியலில் ஈடுபடலாமா என்று டாக்டர்களிடம் கேட்டபோது, கொரோனா காலத்தில் நீங்கள் மக்களைச் சந்தித்து, அவர்களைத் தொடர்பு கொண்டு அரசியலில் ஈடுபடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் அறிவுரை கூறியுள்ளனர். அதனால்,  சூழ்நிலையை கருத்தில் கொண்டு மக்களும், ரசிகர்களும் என்ன முடிவு எடுக்க சொல்கிறார்களோ அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கடிதம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,  இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஜினிகாந்த், ‘அந்த அறிக்கையில் உள்ள,  என் உடல் நிலை  பற்றிய கருத்துக்கள் அனைத்தும் உண்மை, தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் கலந்து ஆலோசித்து எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன்’ என்று நேரில் விளக்கம் அளித்தார். இதனால், ரஜினி அரசியலுக்கு முழுக்கு போடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்த நிலையில்தான் கடந்த வாரம் தமிழகம் வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரஜினியை சந்திக்க முயற்சி செய்த நிலையில், ரஜினி அவரை சந்திக்க மறுத்துவிட்டதாக கூறப்பட்டது.  இதற்கு அவரது உடல்நிலையை காரணமாக கூறப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ரஜினியை பாஜகவுக்கு இழுக்க பாஜக தலைமை முயற்சித்து வரும நிலையில், திடீர் திருப்பமாக  ரஜினியின் தற்போதைய திடீர் அழைப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதையடுதது, இன்று காலை 10 மணிக்கு கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரஜினி மக்கள் மன்ற 38 மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தில் பங்கேற்கும் அனைவரும் காலை 9 மணிக்கே மண்டபத்திற்கு வந்து விட வேண்டும் என்றும், அனைவரும் தவறாமல் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்தில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவாரா அல்லது அரசியலுக்கு முழுக்குப் போடுவாரா? அல்லது பாஜகவுக்கு ஆதரவான நிலை எடுப்பாரா? என்பத குறித்து ஆலோசனை மேற்கொள்வார் என தெரிகிறது. மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நடத்தும் ஆலோசனைக்கேற்ப அவர் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று தெரிகிறது.

ஏற்கனவே பல முறை தனது மக்கள்மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ள ரஜினி, இதுவரை எந்தவொரு தைரியமான, தெளிவான முடிவு எடுக்காத நிலையில், இன்றைய கூட்டத்தைத் தொடர்ந்தும், அவரது அறிவிப்பு எப்போதும்போல வளவள கொழ கொழ-வென என்றுதான் இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LjNtZVVBLTU4bktJ சாய்பாபா  பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன?

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபா  பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன?

#saibaba #saibabablessings #patrikaidotcom #saibabamiracles #jaisaibaba #divotional #omsairam #omsai #omsaibaba #saiaashirwad #shiradi #shridisaibaba
சாய்பாபா பணிப்பெண் மூலமாக தெரிவித்தது என்ன? #saibaba #omsairam
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு..  OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன்

#sengottaiyan #admk #edapadipalaniswamy #tnelection2026 #tamilnadupolitics #patrikaidotcom #dmk #vijay #tamilnadupoliticalnews #kasengottaiyan #kas #ops #eps #tvk #tvkvijay #bjp  #admkalliance #ssarasan #gobichettipalayam #dindukal
எடப்பாடி கூட்டத்தை சேர்க்கிறாரு.. OPS,KAS க்கு தானா வருதா?  நெசவாளன் அரசன் #sengottaiyan
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் 

#thiruppugazh  #aarupadai​ #murugantemple​ #murugan​ #srilankatemples ​  #temples​ #sivaperuman​ #ilakkiyam​ #tamilgod​ #bhakti​ #sivalayam​ #bhaktisongs​ #palani​ #senthilnathan​ #tiruchendur​ #vetrivel​ #kavadi​ #omsaravanabhava​  #tamilnadu​ #pazhamudhircholai​ #thirupugal​ #tiruchendurmurugan​ #patrikaidotcom #aarupadaiveedu #vaitheeswarankovil #thirupparankundram #pazhamudhircholai #kadamba #walajabad #oothukadu
கதிர்காமம் கந்தப்பெருமானே.. உமா பாலசுப்பிரமணியம் #thiruppugazh
Load More... Subscribe

Post navigation

இன்று தமிழக காங்கிரஸ் தலைவர்களுடன் ராகுல் காந்தி ஆலோசனை
திருவொற்றியூர் அருள்மிகு தியாகராஜ சுவாமி கவசத்திறப்பு விழா : நாளை வரை சிறப்பு தரிசனம்

Related Post

தமிழ் நாடு

கோவளத்தில் நீர்த்தேக்கம் அமைக்க தமிழ்நாடு கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி!!

தமிழ் நாடு

அதிமுகவில் இருந்து பிரிந்தவர்கள் ஒன்று சேர்வதற்காகவே அமித்ஷாவைச் சந்தித்தேன்! ஓபிஎஸ்…

தமிழ் நாடு

அதிமுகவில் அடுத்த விக்கெட்? அமைச்சர் முத்துசாமியுடன் முன்னாள் அதிமுக அமைச்சர் திடீர் சந்திப்பு….

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer