Skip to content

today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்

தமிழ் செய்தி இணையதளம்

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
  • Youtube
தமிழ் நாடு

ரூ.3,300 கோடி செலவில் காவிரி உபரி நீர் திட்டம்! திருவாரூரில் முதல்வர் புதிய அறிவிப்பு

Aug 28, 2020

திருவாரூர்: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, இன்று திருவாரூர் மாவட்டத்தில் ஆய்வு செய்த நிலையில்,  மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரி உபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதாக கூறினார்.

மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்டங்களுக்குநேரில் சென்று ஆய்வு நடத்தி வரும் முதல்வர்,  நேற்று காலை கடலூர் மாவட்டத்திலும், மாலையில் நாகையிலும் ஆய்வு கூட்டம் நடத்தினார். பின்னர் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி முடிவுற்ற பணிகளை பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.

இதையடுத்து, இன்று காலை திருவாரூர் வந்தடைந்தார். அங்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்,  மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து  ஆய்வு மேற்கொண்டார்.

முன்னதாக  மாவட் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைதுறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முதல்வர், பயனர்களுக்கு  வீட்டுமனைப்பட்டா, கோவிட்-19 சிறப்பு உதவி தொகுப் பின் கீழ் புலம்பெயர்ந்து சொந்த ஊர் திரும்பியுள்ள இளைஞர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான கடன் மற்றும் உற்பத்தியாளர் குழுக்களுக்கான மானியம், விலையில்லா வீட்டு மனை, பசுமை வீடு, பிரதம மந்திரி தொகுப்பு வீடு, அம்மா இரு சக்கர வாகனம், திட்டம் வேளாண் இயந்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

தொடர்ந்து,  திருவாரூர் மாவட்டத்து பல புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டினார்.  22 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டில் 23 திட்டல் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், அடிக்கல் நாட்டியும், 11 கோடியே 50 லட்சம் மதிப்பில் 14 முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தார்.
பின்னர்  ஆய்வு கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுடன் மாவட்ட வளர்ச்சி பணிகள், கொரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதல்வர்,  திருவாரூர் மாவட்டத்தில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மயிலாடுதுறை- திருத்துறைப்பூண்டி இடையே ரூ.336 கோடியில் இருவழிச்சாலை திட்டம் அமைக்கப்பட உள்ளது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.  திருவாரூர் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 14 பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.  இதுவரை 70 ஆயிரம் காய்ச்சல் முகாம்கள் அரசு சார்பில் நடத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும்,  பிரதம மந்திரி பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் 3 லட்சத்து 64 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.1300 கோடி பயிர் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.

காவிரியில் உபரிநீர் திறக்கப்படும்போது அது கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கும் வகையில் திருவாரூர் மாவட்டத்தில் ரூ.3300 கோடியில் காவிரிஉபரிநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.  இத்திட்டத்தின் மூலம் கடைமடை வரை வடிகால் வசதிகளை சிறப்புற ஏற்படுத்தி காவிரியில் வரும் அபரிமித உபரிநீரை விவசாயிகள் பயன்பெறும் வகையில் பாசனத்துக்காக கொண்டு செல்ல இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று கூறனிர்.

தமிழகஅரசு எப்போதும் விவசாயிகளின் நலன் கருதி விவசாயிகளின் பாதுகாப்புக்காகவே பல்வேறு திட்டங்களை எப்போதும் செயல்படுத்தி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Patrikai.com official YouTube Channel
YouTube Video VVVXVTV4RTg2Vm5pVjhlWjZtS2NlLVR3LlFOSWk4M3hUNHd3 அரசியலில் டோக்கன் கொடுக்கதான் அவர் லாயக்கு - ஆவடி குமார் 

#edapadipalaniswamy #opaneerselvam #ops #admk #tamilpolitics #tnpolitics #tnelection2026 #assemblyelection2026 #bussyanandh #tvkvijay #vijay #sengottaiyan #kas #ttv #sasikala #ttvdinakaran #gobichettipalayam #patrikaidotcom #avadikumar
அரசியலில் டோக்கன் கொடுக்கதான் அவர் லாயக்கு - ஆவடி குமார் 

#edapadipalaniswamy #opaneerselvam #ops #admk #tamilpolitics #tnpolitics #tnelection2026 #assemblyelection2026 #bussyanandh #tvkvijay #vijay #sengottaiyan #kas #ttv #sasikala #ttvdinakaran #gobichettipalayam #patrikaidotcom #avadikumar
அரசியலில் டோக்கன் கொடுக்கதான் அவர் லாயக்கு - ஆவடி குமார் #admk #edapadipalaniswamy
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்கு  பிரச்சனையே இதுதான்- Dr. காந்தராஜ்

#rajinikanth #kamalhaasan #Mahendran #rkfi #kantharaj #drkantharaj #directorshankar #pvasu #avmsaravanan #kollywood #tamilcinenews #tamilcinema #superstarrajinikanth
கமல் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் படத்துக்கு பிரச்சனையே இதுதான் Dr.காந்தராஜ் #thalaivar173
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..
வள்ளியை கவர்ந்து தன் நிலைக்கு கொண்டு வந்த முருகா..#thiruppugazh
Load More... Subscribe

Post navigation

அண்ணாமலை உள்பட பாஜக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு
அழகன்குளம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் ஓஎன்ஜிசி ஆய்வுப் பணிகள்: கைவிட வைகோ வலியுறுத்தல்

Related Post

தமிழ் நாடு

புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் 950 டன் நிவாரணப் பொருட்கள்! கொடிஅசைத்து அனுப்பினார் முதல்வர் ஸ்டாலின்…

தமிழ் நாடு

விளிம்புநிலை மக்களை கைதூக்கி விடுகிறது திமுக ஆட்சி – தாயுமானவர் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

தமிழ் நாடு

சலசலப்பை ஏற்படுத்தி உள்ள பிரவீன் சக்கரவர்த்தி விவகாரம்: ! தனக்கு தெரியாது என்கிறார் செல்வபெருந்தகை…

உலகம்

இந்தியா உலகம்

இரண்டுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மாலை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!

December 4, 2025 A.T.S Pandian
உலகம்

19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்… அமெரிக்கா அறிவிப்பு

December 3, 2025 Sundar
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் உலகம்

புவி காந்த புயல் : இரு தினங்களுக்கு முன் ஏற்பட்ட சக்திவாய்ந்த சூரிய வெடிப்பு காரணமாக நாசா எச்சரிக்கை

December 3, 2025 Sundar
உலகம்

2 வாரத்தில் 1000 பேர் வரை பலி… தெற்கு மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் மழையின் கோரத்தாண்டவம்…

December 1, 2025 Sundar
உலகம்

சிறுவர்களின் ஆபாச வீடியோ தொடர்பாக சிட்னியைச் சேர்ந்த 4 பேரை ஆஸ்திரேலிய போலீசார் கைது செய்துள்ளனர்.

December 1, 2025 Sundar

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer