போபால்: இனி சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டும் தான் அரசு வேலை வழங்கப்படும் என மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது: மத்திய பிரதேச அரசு இன்று ஒரு முக்கிய முடிவை எடுத்து இருக்கிறது. மாநிலத்தில் உள்ள அரசுப்பணிகள் அனைத்தும் இனி, சொந்த மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.
அதற்கு ஏற்ப வகையில் சட்டம் கொண்டு வரப்படும். இது தொடர்பாக மாநில அரசு ஆலோசித்து வருகிறது என்று அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக, சுதந்திர தினத்தன்று வெளியிட்ட அறிவிப்புகள் குறித்து இன்று அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் சவுகான் முக்கிய ஆலோசனை நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்தார்.
Patrikai.com official YouTube Channel