ண்டிகர்

ரியானா தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட  வேட்புமனு அளித்த 8 பாஜகவினர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

அரியானா மாநிலத்தில் முதல்வர் நயாப் சிங் சைனி தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அக்டோபர் 5 ஆம் தேதி மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறுபதிவாகும் வாக்குகள் 8 ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

இத்தேர்தலில் பாஜக, காங்கிரஸ் உள்பட பல்வேறு கட்சிகள் போட்டியிட உள்ளன. பாஜக ஆட்சியில் அமைச்சராக இருந்த ரஞ்சித் சிங் குக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. எனவே ரஞ்சித் சிங் உள்பட பாஜகவினர் 8 பேர் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள ரஞ்சித் சிங் உள்பட 8 பேரையும் பாஜக கட்சியில் இருந்து நீக்கியுள்ளது. அதாவது இன்ந்த 8 பேரையும் 6 ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பாஜக அறிவித்துள்ளது.