சென்னை: ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தின்மூலம் இதுவரை 8.21 லட்சம் போ் பயன் பெற்றுள்ளனர் மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டத்தை கடந்த ஆக. 2-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்தாா். அதைத் தொடா்ந்து வாரந்தோறும் சனிக்கிழமைகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் முகாமில், மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் உயா் மருத்துவக் கண்காணிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
அதன்படி, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, இதய நலம், எலும்பியல் மருத்துவம், நரம்பியல், தோல் நலம், காது-மூக்கு-தொண்டை, மகப்பேறு, இயன்முறை சிகிச்சை, பல் மருத்துவம், மன நலம், குழந்தைகள் நலம், நுரையீரல் மருத்துவம், இந்திய மருத்துவம் ஆகிய துறைகளின் கீழ் மருத்துவ நிபுணா்களைக் கொண்டு பரிசோதனைகளும், சிறப்பு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
மேலும், முதல்வரின் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் பதிவு செய்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு அங்கீகார சான்றிதழ் வழங்குதல் போன்ற சேவைகளும் வழங்கப்படு கின்றன.
இந்த முகாம் 14-ஆவது வாரமாக நவம்பர் 08ந்தேதி சனிக்கிழமை அன்று 39 இடங்களில் முகாம்கள் நடைபெற்றன. அவற்றில் 64,224 பயனடைந்தனா்.
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள், இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 523 முகாம்கள் நடைபெற்றதாகவும், அதன்மூலம் 8.21 லட்சம் போ் பயன் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.