சென்னை: நாட்டின் 79வது சுதந்திர தினவிழாவையொட்டி, சென்னை ஜார்கோட்டையில் உள்ள கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் தேசிய கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

நாட்டின் 79-வது சுதந்திர தினவிழா இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றி வைத்து நாட்டு மக்களக்கு உரையாற்றினார். இதைத்தொடர்ந்து மாநிலங்களில் மாநில முதல்வர்கள் தேசியகொடி ஏற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செய்தார். முன்னதாக அவருக்கு முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை, காவல்துறை அளிக்கப்பட்டது. அதை ஏற்று கொத்தளத்துக்கு வந்தவர், கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
முன்னதாக, இந்தியாவின் 79-வது சுதந்திரதினத்தை முன்னிட்ட்டு முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “நாட்டு மக்கள் அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். 79வது சுதந்திர தின விழாவில் ஜனநாயகம் நிறைந்த தேசத்தை கட்டியெழுப்ப நாம் அனைவரும் உறுதியேற்போம். உண்மையான சுதந்திரம் என்பது மதவெறியை நிராகரித்தல், பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருதல் மற்றும் ஓரங்கட்டப்பட்டவர்களைப் பாதுகாத்தல் என்பதாகும்.
இதன் பொருள் நமது சுதந்திரப் போராளிகள் கற்பனை செய்த லட்சியங்களை நிலைநிறுத்துவதாகும், இதன் மூலம் ஒவ்வொரு நபரும் சமத்துவம், கண்ணியம் மற்றும் மரியாதையுடன் வாழ முடியும்” என கூறியுள்ளார்.