புனே
புனேவில் ஜிபிஎஸ் தொற்றால் 7 பேர் உயிரிழந்து 167 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள புனே நகரில் ஜி.பி.எஸ். எனப்படும் கில்லெயின்-பார்ரே சிண்ட்ரோம் எனப்படும் பாதிப்பு பரவலாக காணப்படுகிறது. இது நரம்பு மண்டலம் பாதிப்பில் தொடங்கி, தசை பலவீனம் மற்றும் முடக்கம் போன்ற பல்வேறு அறிகுறிககாணப்படுகின்றன
மகாராஷ்டிர சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில்,
“ஜி பி எச் பாதிப்புக்கான சந்தேகத்தின் அடிப்படையில் மொத்தம் 192 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், இதுவரை 167 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது”
இவ்வியாதிக்கு 7 பேர் பலியாகி உள்ளனர். அவர்களில் ஒருவருக்கு இந்த ஜி.பி.எஸ். பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. மற்ற 6 பேரின் நிலையும் சந்தேக பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளது.”
எனத் தெரிவித்துள்ளது