போபால்

த்திய பிரதேச வானிலை ஆய்வு மையம் அடுத்த 24 மணி நேரத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என எச்சரித்துள்ளது.

 

நேற்று மத்திய பிரதேசத்தின் போபால் நகரில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், சத்னா, விதிஷா, ரெய்சன், பெதுல், பந்துர்னா மற்றும் சிதி ஆகிய 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. இங்கு 115 மி.மீ. முதல் 204 மி.மீ. வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தலைநகர் போபாலில் கடந்த 48 மணிநேரத்தில் பெய்த தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி காணப்பட்டது. இதனால் அங்கு வாகன போக்குவரத்து முடங்கி மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

போபாலில் இன்றும் நாளையும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.