ஹுனான்

சீனாவின் 2 ஆவது மிகப் பெரிய ஏரியில் கட்டப்பட்டுள்ள அணை உடந்ததல 5700 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக சீனாவின் ஹுனான் மாகாணத்தில் தொடர் கனமழை பெய்து வருவதால் அங்குள்ள மிலோ ஆற்றில் கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நீர்மட்டம் உயர்ந்துள்ளது. எனவே ஆற்றங்கரையோரத்தில் உள்ள கிராமங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

சீனாவின் 2-வது மிகப்பெரிய நன்னீர் ஏரியான டாங்டிங் ஏரியின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுப்புற கிராமங்களில் இருந்து சுமார் 5,700 பேர் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மீட்புப் பணிகளில் சுமார் 2,300-க்கும் மேற்பட்ட மீட்புப் படை வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீனாவின் மற்றொரு மிகப்பெரிய ஏரியான போயாங் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.