டெல்லி

வெறும் ரூ. 11340 கோடிக்கு 5 ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றைகள் ஏலம் போனது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்திய தொலை தொடர்புத் துறை செல்போன்களின் குரல், இணையதள சிக்னல்களுக்கான அலைக்கற்றைகளை (ஸ்பெக்ட்ரம்) ஏலம் விட்டு வருகிறது. நேற்று முன் தினம் 5ஜி மேம்பட்ட சேவைக்கான அலைக்கற்றைகள் ஏலம் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் மொத்தம் 10 ஆயிரத்து 522 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றைகள் ஏலத்துக்கு முன்வைக்கப்பட்டன.

இவற்றுக்கான குறைந்தபட்ச மதிப்பு ரூ.96 ஆயிரத்து 238 கோடி என்று மத்திய அரசு நிர்ணயித்து இருந்தது. இந்த அலைக்கற்றைகள், 800 மெகா ஹெர்ட்ஸ், 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ், 2,100 மெகா ஹெர்ட்ஸ், 2,300 ெமகா ஹெர்ட்ஸ், 2,500 மெகா ஹெர்ட்ஸ், 3,300 மெகா ஹெர்ட்ஸ் என்ற அளவுகளில் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டன.

ஏலம் முதல் நாளில் 5 சுற்று ஏலம் நடந்து. ரூ.11 ஆயிரம் கோடிக்கு மேல் அலைக்கற்றைகள் ஏலம் சென்றன.  தொலைத்தொடர்பு சேைவ நிறுவனங்கள், தங்கள் சேவையை விரிவுபடுத்துவதற்காக 900 மெகா ஹெர்ட்ஸ், 1,800 மெகா ஹெர்ட்ஸ் திறன் கொண்ட அலைக்கற்றைகளை மட்டுமே வாங்கின. இரண்டாம் நாளான நேற்று, சொல்லிக்கொள்ளும்படி ஏலம் போகவில்லை. 140 மெகா ஹெர்ட்ஸ் முதல் 150 மெகா ஹெர்ட்ஸ் வரை மட்டுமே விற்கப்பட்டன.

ஏலத்தில் முதல் சுற்றுக்கு பிறகு யாரும் கேட்கவில்லை.  மேலும் சுற்றுக்கு செல்வதற்கு கிராக்கி இல்லாவிட்டால், ஏலத்தை முடித்துக் கொள்ள வேண்டும் என்பது ஏலத்தின் விதிமுறை ஆகும். ஆகவே, காலை 11.30 மணிக்குள் ஏலம் முடிவுக்கு வந்தது. இதனால் 2 நாட்களில் ஏலம் முடிவடைந்தது.

ஏலத்தில் மொத்தம் ரூ.11 ஆயிரத்து 340 கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் மட்டுமே விற்கப்பட்டுள்ளன. மொத்த குறைந்தபட்ச மதிப்பில் இது 12 சதவீதத்துக்கும் குறைவு ஆகும். ஏராளமான அலைக்கற்றைகள் விற்பனை ஆகாமல் உள்ளன. இதற்கு முன்பு கடந்த 2022-ம் ஆண்டு நடத்தப்பட்ட 5ஜி அலைக்கற்றை ஏலம், 7 நாட்கள் நடந்தது. ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் கோடி மதிப்புள்ள அலைக்கற்றைகள் ஏலம் போனது.