கோவை: கோவை கொடிசியாவில் வரும் 15ந்தேதி நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில், திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த 40 எம்.பி.க்களும் பங்கேற்பர் என்று அமைச்சர்முத்துசாமி தெரிவித்து உள்ளார்.

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி  அமோக வெற்றி பெற்றுள்ளது. போட்டியிட்ட அனைத்து தொகுதிகளிலும் திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் , முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, தமிழ்நாட்டு மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா,  முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பாராட்டு விழா  என முப்பெரும் விழா  ஜூன் 15ஆம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது. விழாவுக்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கியது.  இதை  அமைச்சர் முத்துசாமி மற்றும் தி.மு.க. நிர்வாகிகள்  கலந்துகொண்டு பார்வை யிட்டனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ப அமைச்சர் முத்துசாமி, பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு தமிழக மக்கள் அமோக வெற்றியை வழங்கி உள்ளனர். இதையடுத்து கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா, வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவித்தல், வெற்றி வியூகம் வகுத்த தி.மு.க. நிர்வாகிகளுக்கு பாராட்டு ஆகிய முப்பெரும் விழாவை கோவையில் நடத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதி அளித்தார்.

கோவை கொடிசியா மைதானத்தில் வருகிற 15-ந் தேதி விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும்.  இந்த விழாவில் தமிழகம் மற்றும் புதுவையில் வெற்றி பெற்ற தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி எம்.பி.க்கள் 40 பேரும் பங்கேற்க உள்ளனர். மேலும் அமைச்சர்கள், தமிழகம் முழுவதிலும் இருந்து நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர்.

இதற்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.

திமுக முப்பெரும் விழா ‘கொடிசியா’ மைதானத்துக்கு மாற்றம்! திமுக தலைமை அறிவிப்பு…