ஹரியானா அரசுப் பள்ளிகளில் போலியாக 4 லட்சம் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

2014 – 2016ம் ஆண்டுக்கு இடையே போலியாக சேர்க்கப்பட்ட மாணவர்களின் தரவு மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் அரசுப் பணம் மோசடி செய்யப்பட்டது தெரியவந்தது.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த சிபிஐ-க்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீட், நெட் கேள்வித் தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஹரியானா அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் பெயரில் நடைபெற்றிருக்கும் இந்த மோசடி அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.