டெல்லி
நேற்று நடந்த நிதி அயோக் கூட்டத்தில் நான்கு முதல்வர்கள் பங்கேற்கவில்லை

நேற்று டெல்லியில் உள்ள பாரத் மண்டபத்தில் பிரத்மர் மோடி தலைமையில் நிதி அயோக் கூட்டம் நடந்தது, கூட்டத்தில் இந்தியாவின் பல்வேறு மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட பல முதல்வர்கள் பங்கேற்றனர்
இந்த முறை நிதி ஆயோக் கூட்டத்தில் இந்தமுறை பங்கேற்காதோர் பட்டியலில்,
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, கேரளா முதல்வர் பினராயி விஜயன், கர்நாடகா முதல்வர் சித்தராமையா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அடங்குவர். இவர்களில் சித்தராமையா முன் கூட்டிய நிகழ்வு காரணமாக பங்கேற்க இயலாமல் தனது உரையை மட்டும் கூட்டத்தில் வாசிக்க அனுப்பி வைத்தார்.
பினராயி விஜயன் அவருக்கு பதிலாக அம்மாநில நிதியமைச்சர் பாலகோபாலை கலந்துகொள்ள நியமித்தார். கடந்தாண்டு இவர் பங்கேற்கவில்லை. ரங்கசாமி நிதி ஆயோக் கூட்டத்தை தவிர்த்தது குறித்த எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மம்தா பானர்ஜி கடந்த ஆண்டு நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டதில் வெளிநடப்பு செய்தார். அப்போது அவருக்கு குறைந்த அளவே பேச அனுமதி கொடுக்கப்பட்டது. மேலும் இது குறித்து அவர், பேசும்போது மைக்ரோஃபோன் அணைக்கப்பட்டதாக கூறினார்.
இம்முறை மம்தா பானர்ஜி பங்கேற்காதது குறித்து அக்கட்சி எம்.பி சவுகதா ராய்,
“திட்டக் கமிஷனை மோடி அரசு நிதி ஆயோக் மூலம் மாற்றிய விதம் நெறிமுறையற்றது. அனைத்து மாநிலங்களும் பேச அனுமதிக்கப்படவில்லை. கட்சியின் தலைவர் என்ன சொன்னாலும் அது கட்சியின் முடிவுதான். கூட்டத்தை தவிர்த்த மம்தாவின் முடிவு சரியானது”
என்று கூறினார்.