மராவதி

ன்று பிற்பகல் மகாராஷ்டிரா மாநிலம் அமராவதி மாவட்டத்தில் 4.2 ரிக்டர் அளவில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் அமராவதி மாவட்ட துணை ஆட்சியர் அனில் பட்கர்,

”மகாராஷ்டிர மாநிலத்தின் அமராவதியில் இன்று பிற்பகல் 1.37-க்கு ரிக்டர் அளவில் 4.2 அளவில் லேசான நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தினால் உயிரிழப்போ, பொருள்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை

சிக்கல்தாரா, கட்கும்ப், சுர்னி, பச்டோங்ரி தாலுக்காக்கள் மற்றும் மேல்காட் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்தனர். சில இடங்களில் வீடுகளை விட்டு மக்கள் வெளியேறினர்.

அமராவதி மாவட்டத்தின் பரத்வாடா நகரின் சில பகுதிகளிலும், அகோட் பகுதிகளில் உள்ள தர்னியிலும் லேசான நில அதிர்வுகள் ஏற்பட்டுள்ளன”

எனக் கூறியுள்ளார்.