சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் எற்கனவே மாவட்ட ஆட்சியர்கள் உள்ள நிலையில், தற்போது  மேலும் 38 மாவட்டக்ளுக்கு சிறப்பு அதிகாரிகளாக  ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம். செய்யப்பட்டு உள்ளனர் இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு அரசின் சிறப்புத் திட்டங்கள் அமலாக்கத்தை கண்காணிக்க மாவட்டம் வாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தலைமைச் செயலாளர் முருகானந்தம் உத்தரவு பிறப்பித்துள்ளார்.  அதன்படி 38 மாவட்டங்களுக்கு அரசின் சிறப்பு திட்டங்களை கணிகாணிக்க 38 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள உத்தரவில், “சிறப்பு திட்ட அமலாக்கத் துறையால் அவ்வப்போது வழங்கப்படும் அறிவுறுத்தல்களின் படி கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களை மதிப்பாய்வு செய்வார்கள்.  மாதம் ஒரு முறை தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று ஆய்வு மற்றும் மதிப்பாய்வுகள் உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு அதிகாரிகள் சிறப்பு திட்ட அமலாக்கத்துறைக்கு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு பல்வேறு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. ஆனால் அவ்வாறு செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்கள் முழுமை யாக மக்களிடம் சென்று சேர்கிறதா என்பதில் கேள்விகள் எழுந்துள்ளன. இதனையொட்டி சிறப்பு திட்ட அமலாக்கத்துறை அறிவிக்கும் திட்டங்களை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மாவட்ட வாரியாக 38 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே மாவட்ட ஆட்சியாளர்கள்தான் மாவட்டத்தில் நிறைவேற்றப்படும் அனைத்து திட்டங்களுக்கும் பொறுப்பாளராக உள்ள நிலையில், தற்போது புதிதாக ஒவ்வொரு மாவட்டத்துக்கும் மேலும் ஒரு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு இருப்பது   இது மாவட்ட ஆட்சியர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.