டெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 3,688 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், 2,755 பேர் குணமடைந்துள்ள நிலையில் 50 பேர் பலியாகி உள்ளனர்.

மத்திய சுகாதார அமைச்சகம்இன்று காலை 9 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில், நாட்டில் கொரோனா பாதிப்பு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி, கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும், 3,688 பேர் பாதித்துள்ளனர். இதன் மூலம், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,30,75,864 ஆக உயர்ந்தது.
தற்போது நாடு முழுவதும் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 18,684 ஆக உயர்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 0.04% ஆக உள்ளது
நேற்று மட்டும் சிகிச்சை பலனின்றி 50 கொரோனா நோயாளிகள் இறந்துள்ளனர். இதன்மூலம் நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,23,803 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.22% ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 22,58,059 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை 1,88,89,90,935 கோடி கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
[youtube-feed feed=1]