சென்னை
தமிழகத்தில் இன்று 28,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு மொத்தம் 32,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இன்று தமிழகத்தில் 1,46,798 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது. இதுவரை 6,12,00,909 கொரோனா பரிசோதனை நடந்துள்ளது.

இன்று 27,515 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது. இதில் வெளி நாடுகளில் இருந்து 2 பேர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து ஒருவர் வந்துள்ளனர். இதுவரை 32,52,751 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 53 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 37,412 பேர் உயிர் இழந்துள்ளனர்.
இன்று 28,620 பேர் குணம் அடைந்துள்ளனர். இதுவரை 30,01,805 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
தற்போது 2,13,534 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

இன்று சென்னையில் 5,591 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை சென்னையில் 7,15,665 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று 13 பேர் உயிர் இழந்துள்ளனர். இதுவரை 8,889 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்று 8,676 பேர் குணம் அடைந்து மொத்தம் 6,61,802 பேர் குணம் அடைந்துள்ளனர்.
தற்போது சென்னையில் 44,974 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தமிழக தினசரி கொரோனா பாதிப்பில் கோவை 3,629 உடன் இரண்டாம் இடத்திலும் திருப்பூர் 1,877 உடன் மூன்றாம் இடத்திலும் உள்ளது.

மொத்த பாதிப்பில் இரண்டாவதாக உள்ள கோவை மாவட்டத்தில் 3,02,564 பேர் பாதிக்கப்பட்டு 2,557 பேர் உயிர் இழந்து 2,72,533 பேர் குணம் அடைந்து தற்போது 27,474 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
மொத்த பாதிப்பில் மூன்றாவதாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 2,19,474 பேர் பாதிக்கப்பட்டு 2,602 பேர் உயிர் இழந்து 2,00,754 பேர் குணம் அடைந்து தற்போது 16,118 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
[youtube-feed feed=1]