சென்னை
பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையில் 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் சென்னை சென்டிரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி – கவரைப்பேட்டை ரயில் நிலையம் இடையே காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை (6 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் 25 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
முழுவதுமாக ரத்து
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.05, 9, 9.30, 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து இதேதேதிகளில் 9.55, 11.25, மதியம் 12, 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 8.35, 10.15, மதியம் 12.10,1.05 ஆகிய நேரங்களில் புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, சூலூர்பேட்டையில் இருந்து இதேதேதிகளில் காலை 11.45, மதியம் 1.15, 3.10 இரவு 9 ஆகிய நேரங்களில் புறப்பட்டு மூர்மார்க்கெட் வரும் மின்சார ரெயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
* சென்னை கடற்கரையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.40, மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்களும், மறுமார்க்கமாக, கும்மிடிப்பூண்டியில் இருந்து நாளை காலை 10.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* சூலூர்பேட்டையில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3.50 மணிக்கு புறப்பட்டு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், நெல்லூரில் இருந்து இதேதேதிகளில் மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சூலூர்பேட்டை செல்லும் பயணிகள் ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.
* மூர்மார்க்கெட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் இரவு 11.40 மணிக்கு புறப்பட்டு ஆவடி செல்லும் மின்சார ரெயில் ரத்து செய்யப்படுகிறது.
பகுதி நேர ரத்து
* செங்கல்பட்டில் இருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் நிறுத்தப்படும்.
* கும்மிடிப்பூண்டியிலிருந்து வரும் 13 மற்றும் 15 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, சென்னை கடற்கரையில் இருந்து புறப்படும்.”
எனஅறிவிக்கப்பட்டுள்ளது.