சென்னை: சபரிமலை செல்லும் தமிழக பக்தர்களுக்காக 24 மணி நேர உதவி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளதாக  தமிழ்நாடு அரசு தகவல் வெளியிட்டு உள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோவில் 41நாள் மண்டல பூஜைக்காக திறக்கப்பட்டு உள்ளது. இந்த காலக்கட்டத்தில் நாடு முழுவதும் இருந்து, தினசரி லட்சக்கணக்கானவர்கள் சபரிமலை வந்து செல்வார்கள். குறிப்பாக தமிழ்நாட்டில் இருந்து அதிகம் பேர் சபரிமலை செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இந்த நிலையில்,   சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களுக்​காக அறநிலை​யத்துறை சார்​பில் 24 மணி நேர​மும் செயல்​படும் உதவி மையங்கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இதுகுறித்து இந்து சமய அறநிலை​யத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் மண்டல பூஜை நவ.17 (நேற்​று) முதல் டிச.27-ம் தேதி வரை​யும், மகர​விளக்கு பூஜை டிச.30 முதல் 2026 ஜன.19-ம் தேதி வரை​யும் நடை​பெறுகிறது. இதையொட்​டி, சபரிமலை செல்​லும் தமிழக ஐயப்ப பக்​தர்​களுக்கு உதவுவதற்​காக, 24 மணி நேர​மும் இயங்​கும் தகவல் மையங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

அந்த வகை​யில், சென்​னை​யில் உள்ள இந்து சமய அறநிலை​யத் துறை ஆணை​யர் அலு​வல​கத்​தில் அமைக்​கப்​பட்​டுள்ள தகவல் மையத்தை 18004251757 என்ற கட்​ட​ணமில்லா தொலைபேசி எண்​ணில் தொடர்பு கொள்​ளலாம்.

இரு மாநில எல்​லை​யான களியக்​கா​விளை​யில் உள்ள தகவல் மையத்தை 9488073779, 9486270443, 9442872911 ஆகிய எண்​களில் தொடர்பு கொண்டு தகவல் அறிய​லாம்.

சபரிமலை​யில் அமைக்​கப்​பட்​டுள்ள தகவல் மையத்தை நவ.17 முதல் டிச.2-ம் தேதி வரை 9443994342, 6385806900, 8531070571 ஆகிய எண்​களி​லும்,

டிச.3 முதல் 17-ம் தேதி வரை 8344021828, 7094906442, 7558839969 ஆகிய எண்​களி​லும்,

டிச.18 முதல் 2026 ஜன.2-ம் தேதி வரை 8921937043, 9080650431, 9940576898 என்ற எண்​களி​லும்,

ஜன.3 முதல் 20-ம் தேதி வரை 9843370229, 9942505466, 8438444770

ஆகிய எண்​களி​லும் தொடர்பு கொண்டு தகவல்​களை அறிந்து கொள்​ளலாம்.

இவ்​வாறு  கூறப்பட்டுள்ளது.