சென்னை: சென்னை செண்டிரல் – சூலூர்பேட்டை இடையே இயக்கப்பட்டு வரும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை சென்ட்ரல் – கூடூர் வழித்தடத்தில் உள்ள பொன்னேரி, கவரப்பேட்டை ரயில் நிலையங்கள் இடையே பராமரிப்பு பணி நடைபெறுவதால், நாளை, 11ஆம் தேதி (திங்கட்கிழமை) அன்றும் 19 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது
அதன்படி சென்ட்ரலில் இருந்து இன்று மற்றும் 11ஆம் தேதி காலை 10:30, 11:35 மணிக்கு கும்மிடிப்பூண்டி ல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மற்றும் மாலை 3.15 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது.
இதேபோல சென்னை சென்ட்ரலில் இருந்து காலை 10:15, மதியம் 12.10 மற்றும் 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரயில்களும், மதியம் 1:15, மாலை 3.15, இரவு 9 மணிக்கு சென்ட்ரல் வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
இத்துடன் கடற்கரையிலிருந்து காலை 9:40, மதியம் 12.40 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரயில்களும், கும்மிடிப்பூண்டியில் இருந்து காலை 10:55 மணிக்கு கடற்கரை வரும் மின்சார ரயில் ரத்து செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சூலூர் பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரயிலும், நெல்லூரில் இருந்து மாலை 6:45 மணிக்கு சூளூர்பேட்டை செல்லும் பயணிகள் ரயிலும், சென்ட்ரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் ரயிலும் ரத்து செய்யப்படுகிறது
சிறப்பு ரயில்கள்
எனவே இந்த இரண்டு நாட்களிலும் சென்ட்ரல்- பொன்னேரிக்கு இடையே காலை 10:30 மணி பொன்னேரி சென்ட்ரலுக்கு இடையே மதியம் 1.18, மாலை 3.33 மணி, கடற்கரை பொன்னேரி இடையே மதியம் 12:40 மணி, சென்ட்ரல் – மீஞ்சூர் இடையே காலை 11:35 மணி, மீஞ்சூர் – சென்ட்ரல் இடையே மதியம் 2:59 மணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..
Patrikai.com official YouTube Channel