சபரிமலை
ஜனாதிபதி திரவுபதி முர்மு வின் சபரிமலை பயணத்தை முன்னிட்டு தீவிர பாதுகாப்பு ஏற்பாடுக செய்யப்படுகிறது/

இம்மாதம் ஜனாதிபதி திரவுபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோவிலில் தரிசனம் செய்வதற்காக கேரளா செல்ல உள்ளார். இரண்டு நாள் சுற்றுப்பயணமாக கேரளா செல்லும் அவர், 18 மற்றும் 19ம் தேதிகளில் கோட்டயம் குமரகத்தில் தங்கி இருப்பார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை தேவசம் போர்டும், அம்மாநில போலீசாரும் ஜனாதிபதியின் வருகயை முன்னிட்டு தீவிர பாதுகாப்ப் ஏற்பாடுக்ளை மேற்கொண்டு வருகின்றனர். சபரிமலையில் ஜனாதிபதி வரும் நாட்களில் கடுமையான பாதுகாப்பும், கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
சபரிமலையில் மே 18, 19-ம் தேதிகளில் பக்தர்களுக்கான தரிசன ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. ஜனாதிபதி திரவுபதி முர்மு தரிசனத்திற்காக சபரிமலை வருவதை ஒட்டி ஆன்லைன் முன்பதிவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலைக்கு இந்திய ஜனாதிபதி ஒருவர் வருவது இதுவே முதன் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
[youtube-feed feed=1]