கர்தலா

திடீர் கனமழை மற்றும் வெள்ளத்தால் திரிபுரா மாநிலத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 48 மணி நேரமாக திரிபுரா மாநிலத்தில் இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த தொடர் கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், கட்ம் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.

திரிபுராவில் இதுவரை வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளனர். 8 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 1,000 வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரயில் பாதைகள் பாதிக்கப்பட்டதால் 10 உள்ளூர் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரயில்வே தெரிவித்துள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் உதவியுடன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.