சிவகோடி

ம்மு காஷ்மீரில் பக்தர்கள் சென்ற பேருந்து மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நேற்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள பிரபல கோவிலான சிவகோடி குகைக் கோயிலுக்குச் செல்வதற்காக பக்தர்கள் பேருந்தில் சென்றுகொண்டிருந்தனர். இந்த பேருந்து ரியாசி மாவட்டத்தில் மலைப்பாங்கான பகுதியில் வந்துகொண்டிருந்தபோது திடீரென பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச்சூடு தாக்குதலில் 10 பேர் உயிரிழந்து பலர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து விபத்தில் காயமடைந்தவர்களை உள்ளூர் மக்கள் உதவியுடன் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

விபத்து குறித்து காவல்துறை அதிகாரி ரியாசி மோஹிதா சர்மா,

“ஷிவ் கோரியில் இருந்து கத்ரா நோக்கி சென்று கொண்டிருந்தவர்கள் பஸ் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துப்பாக்கிச்சூட்டினால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், பள்ளத்தாக்கில் விழுந்துள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.”

என்று கூறி உள்ளார்.