சாண்டியாகோ
சிலி நாட்டில் உண்டான காட்டுத்தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்

சிலி நாடு அமெரிக்காவில் உள்ளது நேற்று சிலி மற்றும் மத்திய சிலி ஆகிய இடங்களில் இருக்கும் வனப்பகுதிகள் திடீரென தீப்பற்றி எரிய தொடங்கி அந்த பகுதி முழுவதும் கரும் புகையால் சூழ்ந்துள்ளது. தீ விபத்தால் அங்கு இருந்த 1,000 வீடுகளுக்கு மேல் எரிந்து சேதமடைந்துள்ளன. இதுவரை 10 பேர் உயிரிழந்ததாகத் தெரியவந்துள்ளது.
காவல்துறையினர் மற்று தீயணைப்புத் துறையினருக்கு இந்த விபத்து தொடர்பாக தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தீ பரவுவதைத் தடுக்கும் வகையில், விமானங்களின் உதவியுடனும் தண்ணீர் எடுத்துவரப்பட்டு தீ அணைக்கப்பட்டு வருகிறது.
வனப் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் குறித்து எந்த ஒரு தகவலும் இதுவரை வெளியாகவில்லை. இங்கு மேலும் தீ பரவ வாய்ப்புள்ள இடங்களில் இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அவசரமாக அனுப்பி வைக்கப்பட்டு வருகிறனர்.
[youtube-feed feed=1]