டெல்லி

ரும் 2015 ஆம் வருடம் ஜனவரி 1 ஆம் தேதி வரை டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க மாசு கட்டுப்பாட்டுக் குழு தடை உத்தரவு பிறப்பித்துளது.

வரும் அக்டோபர் 31 ஆம் தேதி தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ், புத்தாண்டு என தொடர்ந்து விழாக்கள் நடைபெற உள்ளன. டெல்லி நகரில் ஏற்கனவே காற்று கடுமையாக மாசு அடைந்துள்ளது  விழாக்களில் பட்டாசு வெடிக்கப்படுவதால் டெல்லியில் காற்று ,மாசு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே டெல்லியில் காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டு, பட்டாசுகளை உற்பத்தி செய்தல், சேமித்தல் மற்றும் ஆன்லைன் மார்க்கெட்டிங் தளங்கள் மூலம் விநியோகம் செய்தல் மற்றும் அனைத்து வகையான பட்டாசுகளை வெடித்தல் என அனைத்து வகையான செயல்களுக்கும் தடை விதிக்கப்படுவதாக டெல்லி மாசுக் கட்டுப்பாட்டு குழு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை டெல்லியில் மாசு பாட்டை கட்டுப்படுத்தும் விதம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினசரி இது குறிட்து எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து காவல்துறை, மின்னஞ்சல் மூலம் மாசு கட்டுப்பாட்டு குழுவிற்கு அறிக்கையாக சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளது.