காளிகஞ்ச்

காளிகஞ்ச் தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம் எல்  ஏ நச்ருதின் அகமது மரணம் அடைந்துள்ளார்.

இன்று அதிகாலை திரிணாமுல் காங்கிரஸ் மூத்த உறுப்பினரும், மேற்கு வங்காள மாநிலத்தில் உள்ள கலிகஞ்ச் தொகுதியின் எம்.எல்.ஏவுமா நசிருதீன் அகமது இன்று காலமானார். அந்தப் பகுதியில் இவரை ‘லால் டா’ என்று அறியப்படுவது வழக்கமாகும்.

நேற்று இரவு 11.50 மணியளவில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பலாசி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இன்று அதிகாலை மருத்துவமையில் மாரடைப்பால் நசிருதீன் அகமது உயிரிழந்தார்.

மேற்கு வங்காள முதல்வர்மம்தா பானர்ஜி எக்ஸ் தளத்தில்

”காளிகஞ்ச் எம்.எல்.ஏ.வான எனது சக ஊழியர் நசிருதீன் அகமதுவின் (லால்) திடீர் மறைவால் வருத்தமடைந்தேன். மூத்த பொது ஊழியர் மற்றும் அரசியல் பிரதிநிதியான அவர் எங்கள் நம்பகமான சொத்து. அவர் ஒரு வழக்கறிஞர் மற்றும் மிகச் சிறந்த சமூக சேவகர், நான் அவரை உண்மையிலேயே மதிப்பேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பின்தொடர்பவர்களுக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று பதிவி\ட்டுள்ளார்.