சென்னை: சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்ட 3 பேர் தாக்​கல் செய்​துள்ள மனுவுக்கு அமலாக்​கத் துறை பதில் அளிக்க சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, கடந்த அதி​முக ஆட்சி காலத்​தில் போக்​கு​வரத்​துத் துறை அமைச்​ச​ராக பதவி வகித்​த​போது போக்​கு​வரத்​துக் கழகத்​தில் வேலை வாங்​கித் தரு​வ​தாகக் கூறி பண மோசடி​யில் ஈடு​பட்​ட​தாக, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 3 வழக்​கு​களைப் பதிவு செய்​துள்​ளனர்.

இந்த வழக்​கின் அடிப்​படை​யில் அமலாக்​கத் துறை​யும் தனி​யாக செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்குமார் உள்​ளிட்​டோர் மீது சட்​ட​ விரோதப் பணப்​பரி​மாற்ற தடைச்​சட்​டத்​தின் கீழ் வழக்​குப்​ப​திவு செய்​துள்​ளது.  இதுதொடர்பான பலமுறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியும் சுமார் ஓராண்டு காலம் தலைமறைவாக இருந்து வந்த அசோக்குமாருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்த நிலையில், அவர் அசோக்மீதான சட்டவிரோத பணபரிமாற்றம் தொடர்பான வழக்கு  சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது செந்​தில் பாலாஜி ஆஜராக​வில்​லை. அவரது சகோ​தரர் அசோக்குமார் ஆஜராகி இருந்தார்.

இந்த வழக்​கில் இருந்து தங்​களை விடுவிக்​கக் கோரி அசோக்குமார்,  கார்த்​தி​கேயன், அனு​ராதா ரமேஷ் ஆகியோர் தனித்தனி  மனுக்​களை தாக்​கல் செய்​திருந்​தனர்.  இந்த மனுவை விசாரித்த நீதிபதி, மனு  தொடர்​பாக அமலாக்​கத் துறை தரப்​பில் பதிலளிக்க உத்​தர​விட்டு வி​சா​ரணையை பிப்​.17-க்​கு நீதிபதி தள்ளிவைத்தார்.

[youtube-feed feed=1]