பெங்களூரு

ர்நாடக பாஜக  மகளிர் அணி பொதுச் செயலாளர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

பெங்களூரு யஸ்வந்த்புரத்தை சேர்ந்தமஞ்சுளா (வயது 42 கர்நாடக மாநிலம் பா.ஜனதா மகளிர் அணியின் பொதுச்செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர் கட்சி பணியில் திறமையாக செயல்பட்டு வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது கணவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததால் அவர் கட்சி பணியில் ஈடுபடாமல் விலகி இருந்தார்.

நேற்றுமதியம் வீட்டில் தனியாக இருந்த மஞ்சுளா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்ர். யஸ்வந்த்புரம் போலீசாருக்கு இது குறித்து தகவல் கிடைத்து அங்கு வந்து மஞ்சுளாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எம்.எஸ்.ராமையா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை நடத்தியபோது மஞ்சுளா கைப்பட எழுதிய கடிதம் போலீசாருக்கு கிடைத்தது.

கடிதத்தில்,

“வாழ்க்கையில் பணம், பெயர், புகழ் ஆகியவை தான் முக்கியம் என்று நினைக்கிறோம். ஆனால் அது உண்மை இல்லை. நான் பணம், பெயர், புகழ் சம்பாதித்துவிட்டேன். ஆனால் நிம்மதி இல்லை. கடந்த சில நாட்களாக நான் நிம்மதி இழந்து தவிக்கிறேன் எனது தற்கொலைக்கு வேறு யாரும் காரணம் இல்லை.எனது தற்கொலைக்கு நான் தான் காரணம்”

என்று குறிப்பிட்டிருந்தார்.

போலீசார் அந்த கடித்தை தடயவியல் ஆய்வு அறிக்கைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனா்.