டெல்லி

ச்சநீதிமன்றம் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக அளிக்கப்பட்ட மனுவை தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாடு முழுவதும் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசியால் பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு தொடர்ந்து வருகிறது. ஆயினும் இதனை மத்திய அரசு மறுத்து வருகிறது.

உச்சநீதிமன்றத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவில்,

“கொரோனா தடுப்பூசிகளால் எந்தவித பயன்களும் கிடையாது. அது பக்கவிளைவுகளை தான் ஏற்படுத்துகிறது. எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு ஒரு நடவடிக்கையுடன் கூடிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும்”

எனக் கோரப்பட்டு இருந்தது.

நேற்ரு இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது

“இதுபோன்ற மனுக்களை எதன் அடிப்படையில் தாக்கல் செய்கிறீர்கள் ? மனுவின் சாராம்சம் என்பது பரபரப்பை ஏற்படுத்துவதற்காவே இருப்பது போன்று உள்ளது. கோவிட் தடுப்பூசி மட்டும் இல்லாவிட்டால், எதுபோன்ற பக்கவிளைவுகள் நமக்கு ஏற்பட்டிருக்கும் என்பதை மனுதாரர் புரிந்து கொண்டிருக்க வேண்டும். எனவே முகாந்திரம் இல்லாத இந்த மனுவை விசாரிக்க முடியாது”

என்று திட்டவட்டமாக தெரிவித்த நீதிபதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து, வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.