tamum-ansari
மனித நேய மக்கள் கட்சியில் இருந்து பிரிந்து மனித நேய ஜனநாயக கட்சியை தொடங்கிய தமிமுன் அன்சாரி கொட்டிவாக்கத்தில் இன்று ( 26.3.2016) அரசியல் மறுமலர்ச்சி மாநாடு நடத்துகிறார். அங்குள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 4 மணிக்கு நடைபெறும் கூட்டத்திற்கு வரும் அனைவரையும் பொருளாளர் ஆரூண்ரசீது வரவேற்கிறார்.
இந்த மாநாட்டில் அ.தி.மு.க. கூட்டணிக்கு மனித நேய ஜனநாயக கட்சி முழு ஆதரவு அளிக்கும் என்று தமிமுன் அன்சாரி பிரகடனப்படுத்தி பேசவிருக்கிறார் என்று கூறப்படுகிறது.