a
ரும் சட்டப்பேரவைத் தேர்தலில் முலாயம்சிங் யாதவ் தலைமையிலான சமாஜ்வாதி கட்சி தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் சைக்கிள் சின்னத்தில் தனித்து போட்டியிடும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் இளங்கோயாதவ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை தேர்வு செய்ய தேர்தல் பணிக்குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, கடந்த தங்களுக்கு முன்பு போல சைக்கிள் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்று தேர்தல் கமிசனிடம் கோரிக்க வைத்ததும், அதற்கு கமிசன் மறுத்ததும் தெரிந்த செய்தி.
ஆனாலும் தங்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்கும் என த.மா.காவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் சமாஜ்வாடி கட்சியின் அறிவிப்பால் அவர்களுக்கு சைக்கிள் சின்னம் கிடைக்காது என்பது உறுதியாகிவிட்டது.