ss

சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் ரஜினி முருகன் வரும் 21ம் தேதி வெளியாவது உறுதியாகி இருக்கிறது. வெற்றிப்படமான “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” படத்தை இயக்கிய பொன்ராம்தான் டைரக்டர் என்பதால் எதிர்பார்ப்பு எகிறியது. ஆனால் தயாரிப்பாளரான (இயக்குநர் ) லிங்குசாமிக்கு இருக்கும் கடன் பிரச்சினைகளால் படம் தள்ளிப்போகும் சூழல்.

இப்போது அடித்துப்பிடித்து எல்லா பிரச்சினைகளையும் சால்வ் செய்துவிட்டார்.

ஆக.. வரும் 21ம் தேதி, ரஜினி முருகன் ரிலீஸ் உறுதி.

அதே நாள், இன்னொரு படமும் வருகிறது. அது – சந்தானம் நடித்த வாலிப ராஜா.

சிவகார்த்திகேயன், சந்தானம் இருவருமே விஜய் டிவி நிகழ்ச்சியில் அறிமுகமாகி தற்போது சினிமாவில் ஜொலிப்பவர்கள். ஆனால் பனிப்போர் மாதிரி வெளியில் தெரியாது என்றாலும் இருவருக்குள்ளும் கடும்  ஈகோ .யுத்தம் உண்டு.

“நம்மகூட டிவியி இருந்த ஆளு இப்போ ஹீரோ… நாம மட்டும் காமெடியனா” என்ற ஆதங்கத்தில்தான் ஹீரோ வேடம் கட்ட ஆரம்பித்தார் சந்தானம். சிவகார்த்திகேயன் ஹீரோவார நடிக்கும் படத்தில் வாய்ப்பு வந்த போது கடும் கோபத்துடன் மறுத்து, நானே ஹீராவா ஆகப்போறேன் என்றார்.

ஆக.. இப்படி யுத்த பரம்பரையினரா இருவரது படமும் ஒரே நாளில் வருகிறது.

“சிவாகார்த்திகேயனுக்கு மார்க்கெட் சூப்பரா இருக்கு. அன்னைக்கு நம்ம படத்தை வெளியிடணுமா” என்று சந்தானத்தின் நலம் விரும்பிகள் கேட்க… கொதித்துவிட்டாராம் சந்தானம்.

“யேய்.. சிவகார்த்திகேயனும் காமெடியன்தான்… பார்த்திருவோம் ஒரு கை” என்று  ஆக்ரோஷமாகிவிட்டாராம். அதற்கு மேலும் ஆவேசமாய் பேசினாராம்.

இதென்ன சந்தானம் நடிக்கும் சினிமாவா.. அப்படியே சொல்ல… அதனால் சென்சார் செய்துவிட்டோம்!