டெல்லி: இஸ்ரேல் காசா மற்றும் ஈரான் மற்றும் லெபனான் மீது தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்குள்ள இந்தியர்களுக்கு இந்திய தூதரகம் அவசர அறிவிப்பை வெளியிட்டுஉள்ளது.  இஸ்ரேலில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க இந்திய தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.

 இஸ்ரேல் மீது தாக்குதல் காஸா, லெபனானில் உள்ள ஹமாஸ், ஹிஸ்புல்லாக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும் ஈரானும் இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நாடுகள் மீது  இஸ்ரோல் கடுமையான தாக்குதலை நடத்தி  அவர்களை கட்டுப்படுத்தி வருகிறது. இந்த நிலையில், நேற்று இரவு இஸ்ரேல் மீது  ஈரான் பதில் தாக்குதலில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டது. இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவது அறிவித்தது. இந்த தாக்குதல்கள் உலக அளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இது 3வது உலகப்போராக மாறும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.

இந்த நிலையில், இஸ்ரோல், ஈரான் மிகப் பெரிய தவறு செய்துவிட்டது; அதற்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும் என எச்சரித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேல்  நாட்டில் வாழும் இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில், “இஸ்ரேலில் இருக்கவும் இந்தியர்களும் எச்சரிக்கையுடனும், விழிப்புடனும், உள்நாட்டு அதிகாரிகளின் அறிவுறுத்தலை பின்பற்றி நடக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறோம். தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும், பாதுகாப்பு பதுங்கு குழிகளுக்கு அருகிலேயே இருக்கவும். நிலைமையை இந்திய தூதரகம் உன்னிப்பாக கவனித்து வருகின்றது. இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இஸ்ரேல் அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

ஏதேனும் அவசரநிலை ஏற்பட்டால், தூதரகத்தின் 24/7 உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்: தொலைபேசி: +972-547520711 +972-543278392 மின்னஞ்சல்: consi.telaviv@mea.gov.in. மேலும், தூதரகத்தில் இன்னும் பதிவு செய்யாத இந்தியர்கள் உடனடியாக பதிவு செய்யவும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.