டெல்லி
துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் நாடாளுமன்றத்துக்குத் தான் உச்சபட்ச அதிகாரம் உள்ளதாககூறி உள்ளார்/
.
இன்று டெல்லி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ,
“நாட்டில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை கொண்ட நாடாளுமன்றம் தான் உயர் அதிகாரம் கொண்டது. அவர்களுக்கு மேலான அதிகாரம் கொண்டவர்கள் யாரும் இல்லை: இரு வெவ்வேறு வழக்குகளில் (கோரக்நாத் வழக்கு மற்றும் கேசவானந்த் பாரதி) அரசியலமைப்பு தொடர்பாக உச்சநீதிமன்றம் இரு விதமான கருத்துக்களை கூறுகிறது.
நமது மவுனம் ரொம்ப ஆபத்தானது. சிந்திக்கும் எண்ணம் கொண்டவர்கள் நமது பாரம்பரியத்தை பாதுகாப்பவர்களாக இருக்க வேண்டும். அரசியலமைப்பு அதிகாரத்தின் ஒவ்வொரு வார்த்தையும் அரசியலமைப்பால் வழிநடத்தப்படுகிறது”
என உரையாற்றி உள்ளார்/…
சமீபத்தில் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், ஜனாதிபதிக்கும் காலக்கெடுவை சுஉச்சநீதிமன்றம் நிர்ணயித்து உத்தரவிட்டது. அதன்படி மசோதா மீது 3 மாதங்களுக்குள் ஜனாதிபதி முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற,ம் கூறியதை துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கதாகும்..
[youtube-feed feed=1]