சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல்  ‘வந்தே பிரைட்’  சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“வந்தே பிரைட்” என்பது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற இந்தியாவின் முதல் அரை-அதிவேக இரயிலைக் குறிக்கிறது. இது விமானப் பயணத்திற்கு இணையான வசதிகளுடன், பயண நேரத்தைக் குறைப்பதற்காக இந்திய ரயில்வேயால் தயாரிக்கப்படுகிறது. முதல்கட்டமாக சரக்கு ரயிலுக்காக இரண்டு ரயில்கள், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையான ஐசிஎஃப்பில் ஆண்டு  4,000-க்கும் அதிகமான ரயில் பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அதிநவீன வசதிகளுடன், அதிவேகமாக செல்லும் ரயில் என்ஜின்கள் மற்றும் ரயில் பெட்டிகளை ஐசிஎஃப் தயாரித்து வருகிறது. அந்த வரிசையில் நாட்டிலேயே முதல்முறையாக விமானங்களில் சரக்குகளை ஏற்றுவதற்கான வசதிகளை உள்ளடக்கிய சரக்கு ரயில் பெட்டிகளுடன் கூடிய 2சரக்கு ரயில்கள் தயாரிக்கப்பட்டு உள்ளன. . இந்த ரயில்களில் விமானங்களில் உள்ளதுபோல அதிநவீன வசதிகள் உள்ளது. இந்த ரயில் எஞ்சின் தயாரிக்கும் நிறைவடைந்துள்ளது. இது நவம்பரில் பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ரயில்  பெட்டிகள் தயாரிக்கும்படி,  கடந்த 2018 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அவை முழுமையாக நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு சரக்கு ரயிலும் தலா 16 சரக்குப் பெட்டிகளைக் கொண்டுள்ளன. உள்ளே சரக்குகள் அடங்கிய ரேக்குகளை எளிதில் இயக்கி நிறுத்தும் வகையில் சக்கரங்களுக்கான வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

குளிா்சாதன வசதியுடன், இரு ரயில்களும் மணிக்கு சுமாா் 90 கி.மீ. முதல் 160 கி.மீ. வேகம் செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளதாகவும், பெட்டிக்கு சுமாா் 260 டன் பொருள்களை ஏற்றலாம் எனவும் ரயில்வே பொறியாளா்கள் தெரிவித்தனா்.

இந்த ரயில்களின் சோதனை ஓட்டம்  விரைவில் நடைபெற உள்ளது. அதன்பிறகு,  வரும் நவம்பரில் சரக்குப் போக்குவரத்து அதிகமுள்ள நிலையங்களில் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரண சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தியைவிட குறைந்த செலவில் இவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.