சென்னை: விமானங்களில் உள்ளது போன்ற அதிநவீன வசதிகளுடன், சென்னை ஐசிஎஃப்-ல் தயாரிக்கப்பட்ட முதல் ‘வந்தே பிரைட்’ சரக்கு ரயில்கள் இயக்கு வதற்காக தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த ரயில் பெட்டிகள் தயாரிக்கும்படி, கடந்த 2018 -ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது அவை முழுமையாக நிறைவடைந்துள்ளன. ஒவ்வொரு சரக்கு ரயிலும் தலா 16 சரக்குப் பெட்டிகளைக் கொண்டுள்ளன. உள்ளே சரக்குகள் அடங்கிய ரேக்குகளை எளிதில் இயக்கி நிறுத்தும் வகையில் சக்கரங்களுக்கான வழிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
குளிா்சாதன வசதியுடன், இரு ரயில்களும் மணிக்கு சுமாா் 90 கி.மீ. முதல் 160 கி.மீ. வேகம் செல்லும் வகையில் வடி வமைக்கப்பட்டுள்ளதாகவும், பெட்டிக்கு சுமாா் 260 டன் பொருள்களை ஏற்றலாம் எனவும் ரயில்வே பொறியாளா்கள் தெரிவித்தனா்.
இந்த ரயில்களின் சோதனை ஓட்டம் விரைவில் நடைபெற உள்ளது. அதன்பிறகு, வரும் நவம்பரில் சரக்குப் போக்குவரத்து அதிகமுள்ள நிலையங்களில் இயக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகிறது. சாதாரண சரக்கு ரயில் பெட்டிகள் உற்பத்தியைவிட குறைந்த செலவில் இவை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே பெட்டிகள் உற்பத்திப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.