புதுச்சேரி

ன்று புதுச்சேரி சட்டசபை  கூட உள்ளது.

கடந்த ஆண்டு ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்தது. இந்த கூட்டத்தொடர் ஆகஸ்ட் 14 ஆம் தேதி முடிந்து சட்டசபை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.  6 மாதத்துக்கு ஒருமுறை சட்டசபை விதிப்படி சபை கூட்டப்பட வேண்டும்.

வருகிற 14 ஆம் தேதிக்குள் சபை கூட்டப்பட வேண்டும் ன்பதால் புதுச்சேரி சட்டசபை இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு கூடுகிறது. புதுச்சேரி சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறள் வாசித்து சபை நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார் .இந்த கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு சபையில் ஒப்புதல் பெறப்படுகிறது.

பிறகு தணிக்கை அறிக்கையின் நகல் தாக்கல் செய்யப்படுகிறது. நாளை ஒரு நாள் மட்டும் சட்டசபை கூட்டம் நடக்கிறது. மேலும் புதுச்சேரி பட்ஜெட் தொகையை இறுதி செய்யும் பணியில் நிதித்துறை உட்பட அரசு துறைகள் தீவிரமாக இறங்கியுள்ளன.

இவ்வாறு பட்ஜெட் தொகை இறுதி செய்யப்பட்டவுடன், மத்திய அரசின் அனுமதிக்காக கோப்பு டெல்லிக்கு அனுப்பப்பட்டு மத்திய அரசு ஒப்புதல் அளித்தவுடன் மீண்டும் வருகிற மார்ச் மாதம் சட்டசபை கூட்டப்பட்டு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை சட்டசபையில் தாக்கல் செய்யப்படும்.