ங்களூரு

னமழை காரணமாக கர்நாடகா மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கல்வி நிலையங்களுக்கு  விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு கர்நாடகா மாநிலத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக தட்சிண கன்னடா மாவட்டத்தில் தொடர் கனமழையால் சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

எனவே இன்று  ஒரு நாள் அங்கன்வாடிகள், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது என மாவட்ட நீதிபதி  அலுவலகம் அறிவித்து உள்ளது.  மேலும் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் கடுமையாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

கனமழை எச்சரிக்கையால் பொதுமக்கள் தாழ்வான பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டு கொள்ளப்பட்டு உள்ளது.

இயற்கை பேரிடர் அல்லது அதுபோன்ற நிகழ்வுகள் ஏதேனும் ஏற்பட்டால், மக்கள் அதுபற்றி உடனடியாக தொடர்புடைய பஞ்சாயத்து அல்லது நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.